டெல்லி: தமிழக கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன. 27-ல் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. மன்னார் வளைகுடா, வாலிநோக்கம் பகுதிகளில் காற்றாலை அமைப்பதற்கு மத்திய அரசு தமிழக அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில் கடற்கரை பகுதிகளில் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.